2 பைக்குகள் மோதி விபத்து – சிறுவன் பலி..!

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு, அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் அரிகிருஷ்ணன் ( வயது 18) இவர் நேற்று உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள ஆல்வின் நகர் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்  இவரது பைக் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்று விட்டது. இதில் அரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார் . சிகிச் க்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் .இது குறித்து அவரது தந்தை செல்வன் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து பலனாய்வு போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த இருசக்கர வாகனத்தை தேடி வருகிறார்.