பட்ட பகலில் துணிகரம்… கோவை வங்கியில் மேலாளர் அறைக்குள் புகுந்து பணம் திருட்டு..!

கோவை ராம்நகரில் ஐ .சி. ஐ. சி. ஐ. வங்கி கிளை உள்ளது. இங்கு மண்டல மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் ( வயது 40)இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றார். 30 நிமிடம் களித்து வந்து பார்த்த போது அவரது அறையில் இருந்த ஒரு லேப்டாப் பணம் ரூ. 4 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இது குறித்து மானேஜர் ராஜேஷ் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.