கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த சமூக சேவகர் மயங்கி விழுந்து சாவு..

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 65) சமூக சேவகர் .இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க பொதுமக்களை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் பட்டா சம்பந்தமாக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.