சென்னையில் 150 சிம்கார்டு, சிம்பாக்ஸ் பயன்படுத்திய 3 பேரை பிடித்து ஐ.பி அதிகாரிகள் தீவிர விசாரணை..!

சிம் பாக்ஸ் பயன்படுத்திய மூன்று பேரை பிடித்து பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்ற வருகிறது.

சென்னை அமைந்தகரையில் சட்டவிரோதமாக சிம் பாக்ஸ் கருவியை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் மேற்கொண்ட மூன்று பேரை பிடித்து ஐ.பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணா நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக செல்போன்கள் அழைப்புகள் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐ.பி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் சிம்பாக்ஸ் கருவிகள், 150 சிம்கார்டுகள், எட்டு ரவுட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றை பயன்படுத்திய மூன்று பேரை பிடித்து அதிகாரிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உண்டா என விசாரித்து வருகின்றனர்.