கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடம்: ரயிலை 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்- சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு..!

ஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு சென்னை சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு சென்னை சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பு தொடா்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமாா்- பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக கடந்தமுறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சோலாா் விளக்குகள் அமைப்பதைத் தவிா்த்து மற்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ரூ. 18 கோடி மதிப்பில் சோலாா் விளக்குத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை நிறுத்த வேண்டி வரும் என்று நீதிபதிகள் எச்சரிக்கைவிடுத்தனா். இந்த வழித்தடம் முக்கியமானது என்பதால் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டாம் என்று ரயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கடினமான மலைப் பகுதியில் இந்த ரயிலை இயக்கக்கூடிய தொழில்நுட்பம் உள்ளபோதும் கூட இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இந்த வழித்தடத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளால் ஆண்டுக்கு 5 முதல் 6 யானைகள் வரை உயிரிழப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழித்தடத்தில் இரவில் ரயில்களை 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.