ஆபாச புகைப்படத்தை காட்டி இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் கைது..!

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் (வயது 34) என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். திருமணமான ஷாஜகான் கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று 23 வயதான இளம்பெண் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வெளியே வந்த ஷாஜகான் அந்த இளம் பெண்ணிடம் தன் கைகள் மூலம் ஆபாச செய்கை காட்டி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் வீட்டுக்குள் சென்று விட்டார் சிறிது நேரம் கழித்து அந்த இளம் பெண் வெளியே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஷாஜகான் திடீரென அந்த இளம் பெண் பக்கத்தில் சென்றார். பின்னர் அவரது செல்போனில் உள்ள ஆபாச புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காட்டினார். அத்துடன் அவரை உல்லாசத்திற்கு அழைத்தாராம். இது குறித்து அந்த பெண் பெரிய கடை வீதி காவல் நிலைத்து புகார் செய்தார். புகார் பேரில் போலீசார் ஷாஜகான் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.