செல்போன் கடையில் திருட்டு – 2 வடமாநில சிறுவர்கள் கைது..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வளையல் கடை வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அகமத் சாதிக் ( வயது 27 )நேற்று முன் தினம் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 7 செல்போன்களை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து அகமத் சாதிக் வால்பாறை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வால்பாறையில் கூலி வேலை செய்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவரையும் 13 வயது சிறுவன் ஒருவரையும் கைது செய்தார் . செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் சிறுவர்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .