7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் இளைஞர் கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19) கூலித் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று சூர்யா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர் கேட்டபோது சூர்யா தனக்கு பாலில் தொல்லை கொடுத்ததாக கூறி அழுதான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சூர்யா அந்த 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை அருகே 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.