இளம்பெண்- மூதாட்டி தற்கொலை..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் ஆர்த்தி ( வயது 20).அந்த பகுதியில் உள்ள வைரத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் மயங்கி விழுந்து விடுவார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆர்த்தி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் சால்வையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் தமிழரசி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதே போல பொள்ளாச்சி பக்கமுள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் மாசலிங்கம். இவரது மனைவி கீதா ( வயது 60)இவர் கடந்த 3 மாதங்களாக தோல் வியாதியால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் மாசலிங்கம் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..