பாம்பு கடித்து இளம் பெண் சாவு

பாம்பு கடித்து இளம் பெண் சாவு… கோவை : கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள தேவனாம்பாளையம், புது காலனி சேர்ந்தவர் காளிமுத்து.இவரது 20 வயது மகள் அவர்களது வீட்டின் பின் நடந்த சென்றார். அப்போது காலில் பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவர் தந்தை காளிமுத்து நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.