கோவில் திருவிழாவில் மோதல். வாலிபருக்கு கத்திக்குத்து..

கோவில் திருவிழாவில் மோதல். வாலிபருக்கு கத்திக்குத்து…     கோவை மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தவர் ஜோதி விக்னேஷ் (வயது 27)இவர் நேற்று முன்தினம் காட்டூரில் உள்ள கங்குலின் மாரியம்மன் கோவில்திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம்|டாங்க் மேட்டை சேர்ந்த மனோஜ்என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை ஜோதி விக்னேஷ் கண்டித்தார். இதனால் ஆத்திரமஅடைந்த மனோஜ்,அவரது நண்பர்களான மேட்டுப்பாளையம் மணி நகரை சேர்ந்த சபரி கிரி ( வயது 20) மணி நகரைச் சேர்ந்த ஜீவானந்தன் ( வயது 21) நவநீதகிருஷ்ணன் (வயது 19 )ஆகியோர் சேர்ந்து ஜோதி விக்னேசை கத்தியால் குத்தினார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தம் (வயது 21) நவநீதகிருஷ்ணன் ( வயது 19 )ஆகியோரை கைது செய்தனர்.மனோஜ்’ சபரி கிரிஆகியோரை தேடி வருகிறார்கள்.