கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் விரக்தியில் இளம்பெண் தற்கொலை-ஆர்.டி.ஓ விசாரணை..!

கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர், ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
உதிர பாண்டியன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா (24).
இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன், ஒரு மகள்
உள்ளனர்.
இந்நிலையில் உதிர பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவரது மனைவி
பிரியங்கா, கணவரிடம் பலமுறை குடிப்பழக்கத்தை நிறுத்த கூறிவந்தார். இதனால்
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மனவேதனை அடைந்த அவர்
விரக்தி அடைந்து வீட்டில் இருந்த தலை முடிக்கு பயன்படுத்தும் ஹேர் டை
குடித்து மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர்
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்கு சேர்த்தார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து
கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ
இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து
வருகிறது.
கணவனின் குடிப்பழக்கத்தால் 3 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.