புத்தாண்டில் விபத்து. கார் மோதி ஒருவர் சாவு…

கோவை அருகே உள்ள ஏ.ஜி.புதூர், ஜி கே .ஆர். நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35)இவர் நேற்று முன்தினம் காலையில் அவிநாசி ரோட்டில் ஒரு பேக்கரி அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் முனியாண்டி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரனை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த உடையாம்பாளையம் அம்பாள் நகரை சேர்ந்த பிரபாகரன் ( வயது 37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.