மாஜி தபால் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை…

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன வேடம் பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 5பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ராஜேந்திரன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.