சேவல் சண்டை நடத்தி சூதாட்டம். 10 பேர் கைது, இருசக்கர வாகனங்கள் பறிமுதல்…

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சின்னம்பாளையம் ஆனந்த் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருக நாதன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சின்னம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5இருசக்கர வாகனங்களும், 2 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக போத்தனூர் அன்பு நகர் மூர்த்தி (வயது 49) ஆத்துபாளையம் சன்மார்( வயது 31) போத்தனூர் அன்சர் ( வயது 31)ஒத்தக்கால் மண்டபம் கார்த்திகேயன் (வயது 33) கைது செய்யப்பட்டனர் ஒரு சேவல்,மற்றும் சூதாட பயன்படுத்தப்பட்ட 2500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது இதே போல பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஒரு சிப்ஸ் கம்பெனி அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மதுக்கரை பிரதாப் (வயது 30) கரடி மடை கார்த்திகேயன் (வயது33) மலுமிச்சம்பட்டி சந்திரன் (வயது 39 குனியமுத்தூர் ரவிராஜ் (வயது 30) பேரூர் பிரசாந்த் ( வயது 23) ஆறுமுக கவுண்டனூர் ராஜேஷ்குமார் ( வயது 27 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .ஒரு சேவலும் (சூதாட பயன்படுத்தப்பட்ட 1400 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.