ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 4 மாதங்கள் தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது..!

ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 4 மாதங்கள் தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது..! கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவராக ஜோசி நிர்மல் குமார் பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு ரோந்து படை சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல்குற்றப் புலனாய்வுத்துறை போலீசில் பதிவான வழக்கில் கடந்த 4மாதங்களாக தலைமறைவாக இருந்த பாலக்காடு,பெரைரியை சேர்ந்த காஜா உசைன் என்பவரை தீவிரமாகதேடி வந்தனர் ,இந்த நிலையில்கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பதுங்கி இருந்தகாஜா உசேனை போலீசார் நேற்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.