கோவை இரும்பு குடோனின் பயங்கர தீ விபத்து…

ராம் நகர் பட்டேல் ரோட்டில் பழைய இரும்பு குடோன் நடத்தி வருபவர் கந்தசாமி,இவரது குடோனில் நேற்று இரவு 8-30 மணி அளவில் திடீரென்று புகை வந்தது. மள ,மள என்று பரவி தீப்பிடிக்க தொடங்கியது.இதுகுறித்து கோவை தெற்கு பகுதி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அதிகாரி அழகர்சாமி தலைமையில்தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர் .இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை ராம்நகர்,பட்டேல் ரோட்டில் உள்ள பழைய இரும்பகுடோனில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்துசென்று தீயை அணைத்தனர்.