வாவ்! சூப்பர்!! சூலூர் சிறப்புநிலை பேரூராட்சிக்கு உலகத் தரச்சான்று..!!

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக இந்திய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அலுவலகம் தொடர்ந்து பல்வேறு பணிகளை திறம்பட செய்து பாராட்டினை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பேரூராட்சியின் நிர்வாகத் திறன், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரமாக்கல் மற்றும் தனியார் நிதி உதவியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலும் சூலூரில் வளர்ச்சிக்கு பேரூராட்சியின் பங்களிப்பு போன்றத் தொடர் நடவடிக்கைகளை மிக சிறப்பாக நடைமுறைப்படுத்திக் கொண்டு வருவதை ஐஎஸ்ஓ நிறுவனம் ஆய்வுக்குட்படுத்தி சூலூர் பேரூராட்சிக்கு ISO 9001:2015 உலகத்தரச்சான்று வழங்கி உள்ளது . அச்சான்றிதழை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி அவர்களிடம் சான்றிதழினை காண்பித்து வாழ்த்துகள் பெறப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் பேரூராட்சிகளின் துணை இயக்குனர் துவாரணாத்சிங், செயல் அலுவலர் சதீஷ்குமார், சூலூர் பேரூராட்சிதலைவர் தேவிமன்னவன், துணைத்தலைவர் ப.கணேசு, தலைமை எழுத்தர் பா.கோவிந்தராஜா ஆகியோர் உடனிருந்தனர்..