காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்றுக்குட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு புள்ளிக்குட்டை சராக பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்தப் பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்ததுதெரியவந்தது.இது தொடர்பாக நடந்த விசாரணையில் யானை தாக்கி அந்த மூதாட்டி இறந்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் நடந்த விசாரணையில் இவர் ஊமப்பாளையம் பகுதியை சார்ந்த பாப்பம்மாள் ( வயது 75) என்பது தெரிய வந்தது. இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..