வாவ்! செம தூள்!! இந்திய ராணுவ வரலாற்றிலேயே முதன் முறையாக.. எல்லை பாதுகாப்பு பணியில் பெண்கள் …

பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் முதன் முறையாக பெண் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதன் முறையாகும். அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பாட்டாலியனை சேர்ந்த வீரர்கள் வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

மொத்தம் 30 பெண் ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை ராணுவ அதிகாரி ஆகும். எல்லை பகுதியில் காம்பேக்ட் டியூட்டி எனப்படும் இது போன்ற பெண்களுக்கு பெண் ராணுவ வீரர்களை நியமிப்பது இதுதான் முதல் தடவையாகும். பெண்களை எல்லையோர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதால் மற்றொரு பாசிட்டிவான விஷயமும் நடைபெற்றுள்ளது. அங்குள்ள காஷ்மீர் மக்களுடன் அதிலும் குறிப்பாக பெண்களுடன் அவர்கள் எளிதாக நட்புறவை பேண முடிகிறது.

மக்களிடம் எளிதாக கலந்து பேச முடிகிறது. ராணுவ வீரர்கள் என்றாலே பொதுவாக ஒரு அச்சம் மக்களிடையே இருக்கும். ஆனால் பெண் ராணுவ வீரர்களிடம் அச்சத்தை தாண்டி கனிவு ஏற்படுகின்றது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவது உளவுத்துறை தகவல்களை உள்ளூர் மக்கள் வாயிலாக பெறுவது போன்றவற்றுக்கு பெண் ராணுவ வீரர்கள் உதவிகரமாக இருக்கின்றனர்.

பெண்கள் என்பதனால் வன்முறை செய்வோரும் மரியாதை கொடுத்து விலகி விடுகின்றார்களாம். மேலும் ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் போன்ற தகவல்களையும் இவர்கள் மக்களோடு பழகி எளிதாக பெற முடிகின்றது. உள்ளூர் பெண்கள் மூலமாக இந்த ராணுவ அதிகாரிகள் எளிதில் தகவல்களை பெற முடிகிறது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.