கோவையில் 141 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேட்டி..!

கோவை: மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 52 புதிய கண்காணிப்பு காமிராக்கள் செயல்பாட்டினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாரயணன் தொடங்கி வைத்தார்.
மூன்றாவது கண் எனப்படும் 10 அதிநவீன வாகன எண்களை கண்டறியும் காமிராக்கள்
உள்ளிட்ட 62 காமிராக்கள் ரூ.10.40 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன காமிராக்கள் மூலம் வாகனங்கள் திருடு போனாலோ அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தாலோ அந்த வாகனத்தின் எண் ஹெல்மெட் போட்டுள்ளாரா ? சீட் பெல்ட் போட்டுள்ளாரா? வாகனத்தின் உரிமையாளர் குறித்த விவரங்கள் கணியியில் சேமிக்கப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கஞ்சா பறிமுதல் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா விற்பனையாளர்கள் 67 பேரும், டீலர்கள் 47 பேரும் கைது
செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் 50 பேரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் மூலம் 13 பேருக்கு நீதிமன்றம் பிணையம்
மறுக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை
இந்த ஆண்டில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரின் மீது குண்டர்
சட்டம் பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த 2
பேரின் சொத்துக்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் 141 பேரின்
வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.