காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனத்தில் 1500 கோடி மோசடி: தமிழகம் முழுவதும் 21 இடங்களில் ரைடு… மின்மினி சரவணன் கைது..!

ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன். இவர் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று கடந்த இரு மாதங்களாக வட்டி தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்தனர்.

இதே போல் தமிழகம் முழுவதுமுள்ள இடைதரர்கள் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 5-ஆம் தேதியன்று தமிழகம் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் காஞ்சிபுரம் கிளை மேலாளராக இருந்த மின்மினி சரவணன் என்பவரது வீட்டிற்கு 5 பேர் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொள்ள சென்ற நிலையில் அவரது வீட்டானது பூட்டிருந்தது. இதனையெடுத்து அவரது வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மின்மினி சரவணனை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் அவரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட இயக்குனர்களை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் IFS என்ற கம்பெனி தொடர்பாக தமிழ் நாடு முழுவதும் நடந்த சோதனையில், 220 முக்கிய ஆவணங்கள், 13 ஹார்ட் டிஸ்க், 5 லேப்டாப், 14 செல்போன்கள், 40 சவரன் நகை மற்றும் ஒரு கோடியை 50 லட்ச ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎஃப்எஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் 79 ஆயிரம் பேரிடம் 4,383 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதே போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 89 ஆயிரம் பேர் 1680 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதும், திருச்சியை சேர்ந்த Elpin -e-Com Ltd என்னும் நிறுவனம் சுமார் 5000 நபர்களிடமிருந்து 400 கோடி ரூபாய் முதலீடு பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிவித்துள்ளது. 3 நிறுவனங்கள் தொடர்பாகவும் 19 வழக்குகளை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறை அறிவிப்பு:பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.eowlnsifscase@gmail.comஆர்பிஐ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் தங்கள் பணத்தை சேமிக்க/டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.