பெயிண்ட் அடிக்கும் போது கயிறு அறுந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி..

கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம் பாளையம் இராமசாமி லேஅவுட் சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன் (வயது 45) பெயிண்டர் இவர் நேற்று நீலிக்கோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் கயிறு கட்டி தொங்கியவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று கயிறு அறுந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து இவரது மனைவி விஜயலட்சுமி சிங்காநல்லூர் போலீஸ் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..