கோவையில் 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்..!

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் வெங்கிட்டாபுரம் ,ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் நதியா (வயது 31 )இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் . கடந்த 29ஆம் தேதி தனது மகள் பிரதிக்ஷா (வயது 14) மகன் சஞ்சீவி (வயது 11) ஆகியோருடன் திடீரென்று எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை மாரிமுத்து பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.