மில்லில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி-3 பேர் மீது வழக்கு பதிவு..

கோவை : தருமபுரி மாவட்டம், மொரசபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் குமார் ( வயது 18 )சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியில் தனியார் நூற்புமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது தந்தை செல்வம் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கட்டிட உரிமையாளர் புஷ்பராஜ் ,இவரது மகன் சத்திய சர்வேஷ், இன்ஜினியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.