கோவை போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்- கல்லூரி மாணவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு ..!

கோவை பீளமேடு சிறப்புசப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று அவினாசி ரோடு சித்ரா சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார்களாம்..இது குறித்து பீளமேடு போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக. வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். விசாரணையில் அவர்கள். ஈரோடு மாவட்டம், பவானி பக்கம் உள்ள மயிலம்பாடியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் ஜோதி ராகவன் (வயது 23,)ஈரோடு தொட்டணி சத்திரம், தனம் நகர் சம்பத்குமார் மகன் சபரிஷ் (வயது 23 ) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி. ஏ .முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்வதாக தடுத்தல் ,தகாத வார்த்தைகளால் பேசுதல் ஆகிய 2 பிரிவின்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.