மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப பலி..

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பொகலூர், முடுகதுறையை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48) கட்டிட வேலை செய்து வந்தார்.இவர் நேற்று காரமடை தேரம்பாளையத்தில் உள்ள மல்லிகா என்பவரது வீட்டில் கட்டிடவேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது அருகில் உள்ள மின் பெட்டியில் இவரது கை தவறுதலாகப்பட்டு தூக்கி வீசப்பட்டார் .இவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.