ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகை,பணம் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை சிங்காநல்லூர்,நீலி கோணாம் பாளையத்தில் உள்ள நேதாஜிபுரம், விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37 ) இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றிருந்தார் . நேற்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேஸ்வரி என்பவர் பார்த்து ரமேசுக்கு தகவல் கொடுத்தார். வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 37 பவுன் நகைகள் பணம் ரூ.13 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து ரமேஷ் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.