தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை குறிச்சி சுந்தராபுரம் முருகன் நகர், 2வது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முரளி ( வயது 30) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். முரளி தனது பெற்றோரிடம் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16 நாட்களுக்கு முன்பு இவரது தாயாரும், இறந்து விட்டார். இதனால் முரளி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் அவரது வீட்டில் சமையலறையில் விட்டத்தில் சேலையை கட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.