மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சர்க்கார் பதியை சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி வைரமணி ( வயது 36) இவர் சேத்து மடையில் உள்ள டாக்டர். ராஜ்மோகன் என்பவரது தோட்டத்தில் கணவருடன்கூலி வேலை செய்து வந்தார் .நேற்று கிணற்று மோட்டார் சவிட்ச்சை அழுத்தும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது கணவர் பாபு ஆனைமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.