கோவையில் 2 மாணவிகள் எங்கோ மாயம்..!

கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள நேத்தாஜி புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகள் மகாலட்சுமி (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ,கடந்த 1-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார் இது குறித்து இவரது தந்தை பழனிச்சாமி கே. . சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதேபோல காரமடை பக்கம் உள்ள கண்ணார் பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இவர் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் கோபித்துக் கொண்டு எங்கோ சென்று விட்டார். இது குறித்து அவரது தந்தை பன்னீர்செல்வம் கே.ஜி சாவடிபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.