பாம்பு கடித்து பெண் பலி..

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 48) நேற்று கணவன் -மனைவி இருவரும் அங்குள்ள பாரதி பார்க் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது சாந்தியின் வலது கால் விரலில் நல்ல பாம்பு கடித்தது. அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ‘சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து அவரது கணவர் சுப்ரமணி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.