கோவை மருத்துவமனையில் நோயாளியிடம் 10 பவுன் நகை திருட்டு..!

திண்டுக்கல் மாவட்டம் ,பழனியில் உள்ள வ .உ .சி. வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 67 )இவர் தனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.மனைவியுடன்மருத்துவமனையில்தங்கி இருந்தார் அப்போது அவரது பையில் மனைவியின் 10 பவுன் நகைகள் 2 வெள்ளி மெட்டி ஆகியவற்றை கழட்டி வைத்திருந்தார்.அந்த நகைகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சுப்பிரமணியம் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..