தோட்டத்தில் வேலை செய்யும் போது பாம்பு கடித்து பெண் பலி..

கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள கம்பல்பாரி பகுதியை சேர்ந்தவர் நல்ல பொம்மு. அவரது மனைவி திருமலை யம்மாள் (வயது 57 ) கூலி தொழிலாளி.இவர் நேற்று அங்குள்ள கொல்லே கவுண்டனூரில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது கணவர் நல்ல பொம்மு ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.