கோழி பண்ணையில் சீட்டாட்டம் – 10 பேர் கைது.!!

கோவை மாவட்டம் காரமடைபாலாஜி நகரில் உள்ள கனகராஜ் கோழிப்பண்ணையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காரமடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் சிட்டுவிளையாடியதாக ஆலங்கொம்பு பெரியசாமி (வயது 34) காட்டூர் முத்துக்குமார் (வயது 27) மேட்டுப்பாளையம் முகமது அசாருதீன் (வயது 23) ஆலங்கொம்பு உதயகுமார் (வயது 27) காரமடை நரேஷ் பாபு (வயது 33) சதீஷ்குமார் (வயது32) குறிஞ்சி நகர் அசோக் (வயது 35) தமிழ்செல்வன் (வயது 2.7)ராஜா (வயது 24)சாதிக் பாட்ஷா ( வயது 36)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட ரூ. 68,400 பறிமுதல் செய்யப்பட்டது..