சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி..

கோவை அருகே உள்ள இருகூர், டி. எஸ் .கே .நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவிதா( வயது 45)இவர் நேற்று அங்குள்ள சிந்தாமணிபுதூர் சந்திப்பில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்று விட்டது. இதில் கவிதா படுகாயம் அடைந்தார்.மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து கணவர் பால சுப்பிரமணியம் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.