பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பெண் தற்கொலை ..

கோவை ஆர் .எஸ். புரம். சுப்பிரமணியபுரம், 2-வது வீதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சொப்னா ( வயது 42)இவரது கணவர் பாலாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதிலிருந்து சொப்னா மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சொப்னா நேற்று அவரது வீட்டில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.