ஸ்கூட்டர் மீது லாரி மோதி கணவர் கண்முன் மனைவி பலியான பரிதாபம்..

கோவை அருகே உள்ள மேற்கு அரசூரைச் சேர்ந்தவர் வடிவேல் இவரது மனைவி கவிதா( வயது 22) நேற்று இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அங்குள்ள என் அன்டி. பைப்பாஸ்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் லாரி இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் வழியில் கவிதா இறந்தார்.இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வ போலீசில்கணவர் வடிவேலு புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக ஈச்சர் லாரி ஒட்டி வந்த பாலக்காடு மாவட்டம் அரியம்பாடியை சேர்ந்த டிரைவர் கோபாலன் ( வயது 66) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.