தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிப்பு..!

சென்னை: இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட தமிழகத்தில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி தொடங்கும். அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய மற்றும் காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி திறன் 10,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியதாவது:- தேசிய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகள் வரை மொத்த மின் உற்பத்தி கட்டமைப்பு 8,500 மெகாவாட்டாக இருந்தது.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால், உள்கட்டமைப்பு வசதி படிப்படியாக அதிகரித்து, 9 ஆயிரத்தை கடந்தது. தற்போது காற்றாலை மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இருந்தாலும் நிலையாக இல்லை. இந்த ஆண்டு காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் வரை நீடிக்கும். எனவே தமிழகத்தில் கோடை காலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.