மின்கம்பத்தில் மொபட் மோதி விவசாயி பரிதாப பலி..!

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வடக்கலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 44) விவசாயி. இவர் நேற்று ஓதிமலை -அன்னூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மொபட் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..