என்ன ஒரு கலாச்சார சீர்கேடு… பீர் குடித்து போஸ் கொடுக்கும் மணமக்கள்… சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ.!!

திருமணத்தின் போது மணமக்கள் பீர் குடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இருவரிடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஒரு மனிதனும், இன்னொரு மனிதனும் (ஆண் – பெண்) இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்.

தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முன்னோர்கள் திருமணம் செய்து வைத்து உற்றார் உறவினர்கள் சூழ அனைவரும் முன்னிலையில் திருமணம் செய்து வாழ்த்து பெற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய தலைமுறை அவற்றை மறந்து அவசரத் திருமணம் செய்து உடனடியாக விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இந்நிலையில் திருமணத்தின் போது பல்வேறு வித்தியாசமான முறையில் திருமணங்கள் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் தனியாக தங்களை புகைப்படம் எடுக்க பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் ஒரு ஜோடி திருமணம் முடிந்த பிறகு பீர் பாட்டிலுடன், பீர் குடித்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.