10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வேன் டிரைவர் போக்சோவில் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் செரையாம்பாளையத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் பாலசுப்பிரமணியன் ( வயது 24)என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது . இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்று விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியையும் பாலசுப்ரமணியத்தை தேடி வந்தனர் .இந்த நிலையில் பாலசுப்ரமணியன் சிறுமியுடன் ஓசூர் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது .இதன் பேரில் போலீசார் ஓசூர் சென்று பாலசுப்பிரமணியனை பிடித்து விசாரித்தனர்.தொடர்ந்து சிறுமியையும்,பாலசுப்பிரமணியனையும் சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆசை வார்த்தை காட்டி சிறுமியை கடத்திச் சென்ற பாலசுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..