கோவை ராமநாதபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் கனகராஜ் ( வயது 76) கடந்த 17-8- 20 20 அன்று இவரது கடைக்கு மோர் மிளகாய் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி சென்றார். அப்போது கனகராஜ் அந்த சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . மேலும் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவ குறித்து பெற்றோர்களிடம் கூறினாள். உடனே சிறுமியின் பெற்றோர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர் . இதை தொடர்ந்து போலீசார் வியாபாரி கனகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார்.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி .கனகராஜுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ. 5 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக வழங்கபட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார்..தண்டனை விதிக்கப்பட்ட கனகராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply