இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இதற்கு காரணம், கடந்த ஆகஸ்ட் 4, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைச் சட்டத்தில்’ திருத்த மசோதா ஆகும்.
இந்த மசோதாவின் கீழ் மத்திய அரசு வணிகர்களிடம் இருந்து Merchant Discount Rate (வணிகர் தள்ளுபடி கட்டணம்) MDR வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போதிருக்கும் சட்டத்தின் படி, UPI பயன்படுத்துபவர்களிடம் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ வங்கிகளோ அல்லது கட்டணச் சேவை நிறுவனங்களோ எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்க முடியாது. அதனால், மேலே கூறியுள்ள சட்டத்தில் உள்ள பிரிவு 10A-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தத் திருத்தம் மேற்கொள்ளபட்டால், இனி மத்திய அரசினால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட முடியும். வணிகர் தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும். வாடிக்கையாளர்கள் வணிகர்களுக்குப் பேமெண்ட் செய்யும்போது, வணிகர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவிகிதத் தொகை கட்டணமாகக் கழிக்கப்படும். இந்தத் திருத்தத்தின் கீழ், குறைந்த மதிப்புடைய பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.







