அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் உக்ரைன் மக்கள்.. கலக்கத்தில் ரஷ்யா படைகள்.!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 19 நாளாக தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது.

குறிப்பாக இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்ற நிலையில், அமெரிக்க ஆயுதங்களை வழங்கும் என அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், உக்ரைனில் உள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.