மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று உறுதி..

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி உ செய்யப்பட்டுள்ளது.

இதை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சமீபத்தில் உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே கோவிட் பரிசோதனை செய்துகொண்டு, தனிமைபடுத்திக் கொள்ளும்படி குறிப்பிட்டுள்ளார்.