திருச்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி.!!

திருச்சியில் தினமும் இரவு பகல் எனப் பாராமல் இருபது நிமிடம் 30 நிமிடம் என மின்சாரம் போய்க்கொண்டிருக்கிறது. கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் இந்த நேரத்தில் மின்சாரம் போனால் பொதுமக்களின் நிலை என்ன என்று அரசு யோசிக்க வேண்டாமா இது தேர்தல் காலம் ஆதலால் அரசு முனைப்புடன் செயல்பட்டு பொது மக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசை கேட்டுக் கொள்கிறார்கள் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..