சைக்கிள் மீது பைக் மோதி ஒருவர் பலி…

கோவை சரவணம்பட்டி பக்கமுள்ள சின்ன மேட்டுப்பாளையம் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் வெள்ளைசாமி (வயது 47 )இவர் நேற்று துடியலூர்- சரவணம்பட்டி ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைநடத்தினார் .இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த கேரள மாநிலம் பையனூர் பகுதியைச் சேர்ந்த ரோஹித் ( வயது 19)என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.