தூக்கு போட்டு திருநங்கை தற்கொலை..

கோவை அறிவொளி நகர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்தவர் சிமிகா ( வயது 25) இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட்டில் வசிக்கும் திருநங்கை சாரோ என்பவருடன் சேர்ந்து சமையல் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சாரோ வீட்டில் இல்லாத நேரம் சிமிகா விட்டத்தில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் மன அழுத்தத்துடன் சிமிகா காணப்பட்டாராம். இதனால் தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கடைவீதி போலீசில் சாரோ புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.