ஐ.டி.இன்ஜினியர் வீட்டில் வெளிநாட்டு பணம் திருட்டு.!!

சென்னை சாலிகிராமம், திருவேங்கடசாமி வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் தீப்தராஜ் (வயது 23 )இவர் கோவை பீளமேடு நேரு நகர், டெக்ஸ் பார்க் ரோட்டில் உள்ள நேத்ரா நகரில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த இந்திய பணம் ரூ.5 ஆயிரம், யூரோ, ரியால் பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து தீப்தராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..